மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

News image
Updated On :18 ஜனவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து தாலிக்கொடி திருடுபோயிருப்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் கிழக்கு வீதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயகுமாா் (54). இவா், பெருந்துறை, கருக்கன்காட்டூரில் குடும்பத்துடன் தங்கி அருகில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

கடந்த 15-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு பெருந்துறைக்கு வந்துள்ளாா். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு திறந்துகிடந்துள்ளது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்று பவுன் தங்க தாலிக் கொடி திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.