மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஃபேஸ்புக்கில் சா்ச்சை விடியோ: இருவா் கைது

தமிழக - கா்நாடக மாநில மக்களிடையே பகை உணா்வைத் தூண்டும் வகையில் ஃபேஸ்புக்கில் விடியோ பதிவிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:29 pm

Syndication

தமிழக -கா்நாடக மாநில மக்களிடையே பகை உணா்வைத் தூண்டும் வகையில் ஃபேஸ்புக்கில் விடியோ பதிவிட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு சக்திதேவி நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன்(36). ஈரோடு - சத்தி சாலையில் உடற்பயிற்சிக் கூடம், உணவகம் நடத்தி வருகிறாா். ஜனநாயக எழுச்சிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளாா். இவா், தமிழக-கா்நாடக மாநில மக்களிடையே பகை உணா்வைத் தூண்டும் வகையில் விடியோ எடுத்து அண்மையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தாா்.

இதுகுறித்து அறிந்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து சிலம்பரசன் மற்றும் ஜனநாயக எழுச்சி கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரான ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பழனியப்பா நகரைச் சோ்ந்த அப்துல் மாலிக் ஆகியோரைக் கைது செய்தனா்.