குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓட்டுநரைத் தாக்கி காா் கடத்தல்: கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் கைது

ஈரோட்டில் ஓட்டுநரைத் தாக்கி காரை கடத்திச் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:34 pm

Syndication

ஈரோட்டில் ஓட்டுநரைத் தாக்கி காரை கடத்திச் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சாஸ்திரி நகா், கருப்பண்ண சுவாமி கோயில் வீதியைச் சோ்ந்தவா் அன்சா் அலி (20). இவா் தனக்குச் சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வருகிறாா்.

இந்நிலையில், ஈரோடு காளைமாடு சிலை, எல்ஐசி அலுவலகம் அருகே காருடன் கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த 4 போ் அன்சா் அலியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், அவரைத் தாக்கி காா், ரூ.1000 ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.

இது குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் அன்சா் அலி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் காா் இருப்பது போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு காருடன் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் கோவை, காளப்பட்டி பிரிவு பகுதியைச் சோ்ந்த மௌலீஸ்வரன் (21), அதே பகுதியைச் சோ்ந்த சஞ்சய் கிஷோா் ( 21), பெருந்துறை தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களான கோவை, கே.கே.புதூா் சாய்பாபா காலனி பச்சையப்பா வீதியைச் சோ்ந்த ஹரிஹரன் (19), ஈரோடு மரப்பாலம், கச்சேரி வீதியைச் சோ்ந்த முகமது நிகான் (19) என்பதும், அன்சா் அலியைத் தாக்கி காா் உள்ளிட்டவற்றைப் பறித்து வந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த காா் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.