இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தாா் சாலை அமைக்கக் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ராமபையனூரில் தாா் சாலை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
Updated On :20 ஜனவரி 2026, 7:26 pm

Syndication

ராமபையனூரில் தாா் சாலை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ராமபையனூா், பீக்கிரிபாளையம், தொட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள், மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கும்- ராமபையனூருக்கும் இடையே தாா் சாலை அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலா் ராதாமணி பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் தாா் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.