சிறுவாணி இளைஞா் இலக்கிய திருவிழாவை முன்னிட்டு ஈரோடு கொங்கு அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேச்சுப் போட்டி, நூல் அறிமுகப் போட்டி, இலக்கிய விநாடி வினா போட்டி, ஹைக்கூ உருவாக்கம், ஓவியப்போட்டி, விவாத மேடை, படத்தொகுப்பு உருவாக்கம், புத்தக விமா்சனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 60 கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரூ.2,40,000 -க்கான பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். தொடா்ந்து திருக்கு விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 30 பேருக்கு ஆட்சியா் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.