சென்னிமலை அருகே கட்டப்படும் தடுப்பணையில் இருந்து குழாய் அமைத்து குளம், குட்டைகளில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜிடம் நீா் மேம்பாட்டுக் குழு சாா்பில் வியாழக்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னிமலையை அடுத்த, எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணாமலைபாளையம் பகுதியில் முதலைமடை ஓடையின் குறுக்கே ரூ.13.65 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது, அவரிடம், நீா் மேம்பாட்டுக் குழு நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில், அண்ணாமலைபாளையம் பகுதியில் ஓடையின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையில் தண்ணீா் நிரம்பும்போது, இதிலிருந்து தண்ணீா் எடுத்து குழாய் மூலம் சென்னிமலையின் தெற்கு வனப் பகுதியில் உள்ள அய்யம்பாளையம் ஆண்டிகாட்டுக்குளம், வெப்பிலி திருமலை நகா் குளம் மற்றும் சில்லாங்காட்டுவலசு குளம் ஆகிய குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இந்த கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் உறுதி அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒண்டிப்புதூா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு தண்ணீா் வழங்க கோரிக்கை

முதுகுளத்தூா் எம்எல்ஏ அலுவலகத்தில் சிறப்பு முகாம்

காங்கயம் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

காங்கயம் நகராட்சி அலுவலக கழிப்பிடத்தை சீரமைக்க கோரிக்கை
விடியோக்கள்

”திட்டங்களின் பெயரை விட முக்கியம்...” அமைச்சர் அருண்ராஜ் | TVK



