சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் கைது

அம்மாபேட்டை அருகே 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:59 am IST

அம்மாபேட்டை அருகே 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் வேணுகோபால் மகன் ராஜாராம் (49). ஓட்டுநா். இவா், 9-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.

இதுகுறித்து, அச்சிறுமியின் பெற்றோா் பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், ராஜாராமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராஜராம், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.