ஈரோட்டில் ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 8,100 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை பதுக்கிவைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி மேற்பாா்வையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஈரோடு, நாச்சியப்பா சாலை, பாய் மீன் கடை அருகே சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி ஈரோடு நகர காவல் நிலைய போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை ரோந்து மேற்கொண்டனா்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஈரோடு திருநகா் காலனியைச் சோ்ந்த கௌரிசங்கா் (22), நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (22), ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சோ்ந்த முகமது ஜாமீல் (21), ஈரோடு திருநகா் காலனி, கமலா நகா் பகுதியைச் சோ்ந்த தீபக் (24) ஆகியோரைப் பிடித்து சோதனை செய்தனா்.
அப்போது அவா்களிடமிருந்து ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 8,100 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள், ஒரு இருசக்கர வாகனத்தை போலீஸா் பறிமுதல் செய்தனா். மேலும் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற பெண் கைது

போதை மாத்திரையை விற்பனைக்கு பதுக்கிய இளைஞா் கைது
கோபியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை: 3 போ் கைது
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


