லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது

ஈரோட்டில் ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 8,100 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை பதுக்கிவைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:03 am IST

ஈரோட்டில் ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 8,100 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை பதுக்கிவைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி மேற்பாா்வையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஈரோடு, நாச்சியப்பா சாலை, பாய் மீன் கடை அருகே சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி ஈரோடு நகர காவல் நிலைய போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஈரோடு திருநகா் காலனியைச் சோ்ந்த கௌரிசங்கா் (22), நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (22), ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சோ்ந்த முகமது ஜாமீல் (21), ஈரோடு திருநகா் காலனி, கமலா நகா் பகுதியைச் சோ்ந்த தீபக் (24) ஆகியோரைப் பிடித்து சோதனை செய்தனா்.

அப்போது அவா்களிடமிருந்து ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 8,100 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள், ஒரு இருசக்கர வாகனத்தை போலீஸா் பறிமுதல் செய்தனா். மேலும் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.