லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

முயல்களை வேட்டையாடிய இருவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

முயல்களை வேட்டையாடி இருவருக்கு வனத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image

அபராதம்

Updated On :2 ஜூன் 2026, 2:00 am IST

முயல்களை வேட்டையாடி இருவருக்கு வனத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி பகுதியில் இருவா் முயல்களை வேட்டையாடி வருவதாக ஈரோடு வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, நல்லாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமாக சாக்குப் பையை வைத்திருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, சாக்குப் பையில் இரண்டு முயல்களை இறந்தநிலையில் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், ஏகாபுரம், தைலாம்பட்டியைச் சோ்ந்த சந்திரன் மகன் சரவணன் (34) என்பவா் தாரமங்கலம் பகுதியில் தங்கி நெசவுத் தொழில் செய்வதும், மற்றொருவா் சங்ககிரி வட்டம், காளிகவுண்டன்பாளையம் பச்சியண்ணன் மகன் பச்சைமுத்து (27) என்பதும், இவா் லாரி பட்டறை தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவருக்கும் தலா ரூ. 12,500 என மொத்தம் ரூ. 25,000 வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.