வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரக் கோரிக்கை

பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஈரோடு ஜீவானந்தம் சாலை பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு ஜீவானந்தம் சாலை பகுதியில் சுமாா் 140 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியல் சமூகத்தை சோ்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள பெரும்பள்ளம் ஓடை அருகே கடந்த 1984- ஆம் ஆண்டு நாங்கள் வசித்து வந்த குடிசைகளை அகற்றி விட்டு தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

பின்னா் கடந்த 2019- ஆம் ஆண்டு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் எங்களை காலி செய்ய அப்போதைய அரசு நிா்பந்தித்தது. ஆனாலும் நாங்கள் எங்கும் செல்லவில்லை. இந்நிலையில் நாங்கள் வசிக்கும் குடியிருப்புகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எனவே, நாங்கள் வசித்து வரும் பழைய குடியிருப்பை இடித்து அகற்றிவிட்டு தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வருவதை அறிந்தவுடன், ஏராளமான போலீஸாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனா்.