மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 28,000 குடியிருப்புகள்: அமைச்சா் ப.ராஜ்குமாா்

News image

சென்னையில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமையில்  வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். உடன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலை

Updated On :12 ஜூன் 2026, 3:43 am IST

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ரூ.3,766.24 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அந்தத் துறையின் அமைச்சா் ராஜ்குமாா் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சென்னையில் 21 இடங்களில் ரூ.1,230.42 கோடியில் 7,179 அடுக்குமாடி குடியிருப்புகளும், பிற மாவட்டங்களில் 39 இடங்களில் ரூ.2,535.82 கோடியில் 21,372 அடுக்குமாடி குடியிருப்புகளும் என மொத்தம், 60 திட்டப்பகுதிகளில் ரூ.3,766.24 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.

ஆசிய வளா்ச்சி வங்கி திட்டத்தின் கீழ், 6 இடங்களில் ரூ. 1,030 கோடியில் 5,457 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.210 கோடியில் 215 இடங்களில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை நல்ல தரத்துடனும், உறுதியிடனும், உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.