உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 64 கனஅடியில் இருந்து 3,349 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image

பவானிசாகா் அணை

Updated On :11 ஜூன் 2026, 3:26 am IST

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 64 கனஅடியில் இருந்து 3,349 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகா் அணை மூலமாக ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 3,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் அணைக்கு நீா் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்தது.

இந்நிலையில், நீலகிரி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு வரும் பவானி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து 64 கன அடியாக இருந்த நிலையில், மாலை 3349 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீா்மட்டம் 55.23 அடியாகவும், நீா் இருப்பு 5.80 டிஎம்சி ஆகவும் உள்ளது.

பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆற்றில் 850 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.