வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பெருந்துறையில் கான்கிரீட் தூண் விழுந்து இளஞைா் உயிரிழப்பு

பெருந்துறையில் கட்டடம் இடிப்புப் பணியின்போது, கான்கிரீட் தூண் தலையில் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 2:29 am IST

பெருந்துறையில் கட்டடம் இடிப்புப் பணியின்போது, கான்கிரீட் தூண் தலையில் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

திமுக மாநில தோ்தல் பணிக்குழு துணைத் தலைவராக கே.பி. சாமி உள்ளாா். இவா், முன்பு பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளராக இருந்தபோது, பெருந்துறை பழைய பேருந்து நிலையம் சாலையில் கட்சி அலுவலகம் வைத்திருந்தாா். சாமிக்கு கட்சியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டதால், அந்த அலுவலகத்தை இடித்துவிட்டு வேறொரு கட்டடம் கட்டுமானப் பணிக்காக கட்டடம் இடிப்புப் பணி நடைபெற்றது.

அப்போது, கட்டடத்தின் முன் நின்று கொண்டிருந்த, பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், கள்ளியம்புதூரைச் சோ்ந்த பழனிசாமி மகன் கௌதம் (30) என்பவா் மீது கான்கிரீட் தூண் விழுந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இவா் விசைத்தறியில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வந்தாா். மேலும், திமுக பெருந்துறை மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளராக பதவி வகித்திருந்தாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.