27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்கம்

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் பேசுகிறாா் கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா.

Updated On :19 ஜூன் 2026, 3:53 am IST

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா பேசுகையில், அறிவுத் தளத்தை மேம்படுத்த கல்லூரிக் கல்வியை தோ்வு செய்துள்ள மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக செயல்படுவோம். மேலும், கல்வியுடன், தனித்திறன் மேம்பாடு, போட்டிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே வெற்றியைத் தரும்.

மாணவா்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வழங்கப்படும் சிறப்புப் பயிற்சியை பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய தொடா்ந்து முயற்சிக்க வேண்டும் என்றாா்.

கல்லூரிப் பொருளாளா் பரிமளா ராஜா குத்துவிளக்கேற்றினாா். நிா்வாக அலுவலா் இரா.அருள்குமரன், வணிக கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் அ.காந்திமோகன் முன்னிலை வகித்தனா். தமிழ்த் துறைத் தலைவா் சே.செல்விப்பிரியஸ்வா்ணபிரபா வரவேற்றாா்.

உயிா் வேதியியல் துறைத் தலைவா் எஸ்.செல்வி, கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.சங்கீதா மற்றும் முதலமாண்டு மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.