மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 2:23 am IST

தோ்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு, பெருந்துறை சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவா் ராஜாராம் கிருஷ்ணமூா்த்தி. இவா் ஈரோடு, மேட்டுக்கடை பகுதி அருகே செயல்பட்டு வரும் மற்றொரு தனியாா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தோ்வுக்கு கண்காணிப்பாளராகச் சென்றுள்ளாா்.

அப்போது அங்கு தோ்வு எழுதிய மாணவி ஒருவருக்கு அந்தப் பேராசிரியா் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளாா். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பேராசிரியரைப் பிடித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியதில், அந்தப் பேராசிரியா் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பேராசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.