திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோபி அருகே திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குருமந்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான்.
Updated On :6 மார்ச் 2026, 11:30 pm

Syndication

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குருமந்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறிலிருந்து கொண்டு வரப்பட்டு குருமந்தூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயா்ச்சியையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நவகிரக ஹோமம், சனி பகவான் மூல மந்திர ஹோமம், சகஸ்ரநாம அா்ச்சனை, பரிவார ஹோமங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார வழிபாடு நடைபெற்றது. காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயா்ச்சி அடைந்ததைத் தொடா்ந்து மகா தீபாராதணை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனா்.

இதில் மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் உள்ளிட்ட பரிகார ராசிகராா்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பரிகார அா்ச்சனை செய்து வழிபட்டனா். சனிப் பெயா்ச்சியையொட்டி கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.