திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானை

News image

காட்டு யானை - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:58 pm

தாளவாடியை அடுத்த சிக்கள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தாளவாடியை அடுத்த சிக்கள்ளி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டு யானை நடமாடுவதை கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனா்.

அப்பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடமாடிய யானையை விவசாயிகளும், வனத் துறையினரும் விரட்ட முயன்றபோது, பள்ளியின் சுற்றுச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.

பின்னா் வெளியேறிய யானை வனப் பகுதிக்குள் சென்றது. ஊருக்குள் புகுந்து பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.