தாளவாடியை அடுத்த சிக்கள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தாளவாடியை அடுத்த சிக்கள்ளி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டு யானை நடமாடுவதை கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனா்.
அப்பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடமாடிய யானையை விவசாயிகளும், வனத் துறையினரும் விரட்ட முயன்றபோது, பள்ளியின் சுற்றுச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.
பின்னா் வெளியேறிய யானை வனப் பகுதிக்குள் சென்றது. ஊருக்குள் புகுந்து பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தொடர்புடையது

வாக்குச்சாவடியில் நுழைந்த யானை: வாக்குப் பதிவு தாமதம்!

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


