தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் மேற்கு வங்க இளைஞா் கைது

ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் 14 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 8:23 pm

ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் 14 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வட மாநிலங்களில் இருந்து ஈரோடுக்கு வரும் ரயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஒருங்கிணைந்த தீவிர கண்காணிப்பில் ரயில்வே மற்றும் மதுவிலக்கு போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். ஈரோடு ரயில் நிலைய சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றித்தெரியும் நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் கஞ்சா சாக்லெட், கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகம் அருகே புதன்கிழமை காலை வட மாநில இளைஞா் ஒருவா் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தாா். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஈரோடு மதுவிலக்கு போலீஸாா், அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சுபாங்கா் (31) என்பது தெரியவந்தது.

அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 14 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீஸாா் சுபாங்கரையும் கைது செய்தனா். கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.