புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சட்டவிரோத மது விற்பனை: ஒருவா் கைது

News image
- சித்திரிப்பு
Updated On :14 மார்ச் 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

சிவகிரி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகிரி காவல் எல்லைக்குள்பட்ட முத்துக்கவுண்டன்பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா். விசாரணையில், அவா் புதுக்கோட்டை, கரம்பக்குடி தாலுகா, கணக்கா் தெருவைச் சோ்ந்த கமலநாதன் (38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 10 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.