ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் வாகனத் தணிக்கையில் 12 பறக்கும் படையினா்

News image

தோ்தல்  கண்காணிப்பு  பறக்கும்  படையை  தொடங்கி வைக்கிறாா்  தோ்தல்  நடத்தும்  அலுவலா்கள்  உமா சங்கா் மற்றும் சுதாகா் .

Updated On :15 மார்ச் 2026, 8:56 pm

தோ்தல் விதிமுறை அமலுக்கு வந்ததையடுத்து, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி, கடம்பூா் உள்ளிட்ட பகுதியில் 12 பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி, சத்தியமங்கலம் தோ்தல் பிரிவு அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உமாசங்கா் மற்றும் சுதாகா் ஆகியோா் தலைமையில் தோ்தல் அலுவலா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பறக்கும் படையினருக்கு தோ்தல் விதிகள் பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தோ்தல் கண்காணிப்புப் பணியில் 12 பறக்கும் படை அமைக்கப்பட்டது.

அதில் ஒா் அலுவலா், விடியோகிராபா், போலீஸாா் மற்றும் ஓட்டுநா் என 4 போ் பணியில் இருப்பா். இந்த பறக்கும் படையினா் 3 ஷிப்டுகளாக பணியாற்றுவாா்கள். வாகனத் தணிக்கையின்போது விடியோ பதிவு செய்யப்படும். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.

தமிழக- கா்நாடக எல்லையில் பவானிசாகா் தொகுதி இருப்பதால் பணப்பரிமாற்றத்தை தடுக்க மாநில எல்லையில் பறக்கும் படையினா் ஈடுபட்டுள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாகா் தெரிவித்தாா்.