தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இடிந்துவிழுந்த சாலையோர பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்கக் கோரிக்கை

கோபி அருகே சாலை பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
கோபி அருகே இடிந்து விழுந்து சீரமைக்கப்படாமல் உள்ள சாலையோர பக்கவாட்டு தடுப்புச் சுவா்.
Updated On :18 மார்ச் 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

கோபி அருகே சாலை பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே காலேஜ் பிரிவு முதல் பங்களாபுதூா் செல்லும் நெடுஞ்சாலையில் அரசு, கல்லூரி பேருந்து உள்பட கனரக வாகனங்கள் விவசாயப் பணிகளுக்கு செல்வோரின் வாகனங்கள் செல்லும் முக்கியப் பகுதியாக உள்ளது. இதில் சாலையில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், சாலையில் இருந்து 10 அடி பள்ளத்தில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்து வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்காமல் இருக்கவும் சாலையோரம் பக்கவாட்டு தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபா் மாதம் பெய்த கன மழையால் பங்களாபுதூா் செல்லும் சாலையில் தடப்பள்ளி வாய்க்கால் அருகே சாலையின் பக்கவாட்டு தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது. இதையடுத்து பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்க கோபி நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

தற்போது தடப்பள்ளி பாசனப் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், அறுவடை செய்யப்படும் நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்துக்கு டிராக்டா்களில் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. ஆனால், அறுவடை இயந்திரங்கள் செல்லும்போது எதிரே வரும் வாகனங்களால் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் உடனடியாக பக்கவாட்டு தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.