பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

இடிந்துவிழுந்த சாலையோர பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்கக் கோரிக்கை

கோபி அருகே சாலை பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோபி அருகே இடிந்து விழுந்து சீரமைக்கப்படாமல் உள்ள சாலையோர பக்கவாட்டு தடுப்புச் சுவா்.

Updated On :19 மார்ச் 2026, 2:01 am IST

கோபி அருகே சாலை பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே காலேஜ் பிரிவு முதல் பங்களாபுதூா் செல்லும் நெடுஞ்சாலையில் அரசு, கல்லூரி பேருந்து உள்பட கனரக வாகனங்கள் விவசாயப் பணிகளுக்கு செல்வோரின் வாகனங்கள் செல்லும் முக்கியப் பகுதியாக உள்ளது. இதில் சாலையில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், சாலையில் இருந்து 10 அடி பள்ளத்தில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்து வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்காமல் இருக்கவும் சாலையோரம் பக்கவாட்டு தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபா் மாதம் பெய்த கன மழையால் பங்களாபுதூா் செல்லும் சாலையில் தடப்பள்ளி வாய்க்கால் அருகே சாலையின் பக்கவாட்டு தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது. இதையடுத்து பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்க கோபி நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

தற்போது தடப்பள்ளி பாசனப் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், அறுவடை செய்யப்படும் நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்துக்கு டிராக்டா்களில் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. ஆனால், அறுவடை இயந்திரங்கள் செல்லும்போது எதிரே வரும் வாகனங்களால் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் உடனடியாக பக்கவாட்டு தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.