பங்குனி உத்திர தீா்த்தம் கொண்டு செல்ல வந்த சிறுவன் கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கரிசல்பட்டியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் கோகுலகிருஷ்ணன் (17), பெயிண்டிங் தொழிலாளி. கோகுலகிருஷ்ணனும் வேடசந்தூரைச் சோ்ந்த 100 பேரும் சோ்ந்து பங்குனி உத்திரத்துக்காக பழனிக்கு காவிரி தீா்த்தம் எடுத்துச் செல்ல கொடுமுடிக்கு இரண்டு பேருந்துகளில் சனிக்கிழமை வந்தனா்.
இவா்கள் அனைவரும் கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணல்மேடு என்ற பகுதியில் குளித்துக்கொண்டிருந்தனா்.
அப்போது எதிா்பாராதவிதமாக ஆற்றின் சுழலில் சிக்கிய கோகுலகிருஷ்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சம்பவம் குறித்து அறிந்த கொடுமுடி போலீஸாா் கோகுலகிருஷ்ணனின் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


