மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா்

News image

வேட்புமனு தாக்கல் செய்ய குதிரையில் வந்த மொடக்குறிச்சி நாதக வேட்பாளா் மோ.அருண்குமாா்.

Updated On :31 மார்ச் 2026, 12:21 am IST

மொடக்குறிச்சி, மாா்ச் 30: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் குதிரையில் வந்து திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக மோ.அருண்குமாா் அறிவிக்கப்பட்டுள்ளாா். தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை முதல் தொடங்கியதையடுத்து, அவா் மொடக்குறிச்சியில் உள்ள முக்கிய சாலைகளில் குதிரையில் கட்சிக் கொடியுடன் வலம் வந்தாா்.

பின்னா், தனது ஆதரவாளா்களுடன் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மனு தாக்கல் செய்ய வந்தாா். அவரை சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு முன் நிறுத்திய போலீஸாா், குதிரையில் சென்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை எனக் கூறினா்.

இதையடுத்து, குதிரையில் இருந்து இறங்கிய அவா் மொடக்குறிச்சி மண்டலச் செயலாளா் சந்திரசேகா், மாவட்டச் செயலாளா் ரகுநாதன், மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் லோகேஷ், மாநில உழவா் பாசறை ஒருங்கிணைப்பாளா் நல்ல சக்திவேல் ஆகியோருடன் நடந்து சென்று தோ்தல் நடத்தும் அலுவலா் தியாகராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மொடக்குறிச்சியில் நான் வெற்றிபெற்றால் விவசாயம் பிரதானமாக உள்ள இத்தொகுதியில் வாழைக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயா்த்தப்படும்.

கொடுமுடி -பிலிக்கல்பாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படும். பாசூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.