நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா்

News image

வேட்புமனு தாக்கல் செய்ய குதிரையில் வந்த மொடக்குறிச்சி நாதக வேட்பாளா் மோ.அருண்குமாா்.

Updated On :30 மார்ச் 2026, 6:51 pm

மொடக்குறிச்சி, மாா்ச் 30: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் குதிரையில் வந்து திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக மோ.அருண்குமாா் அறிவிக்கப்பட்டுள்ளாா். தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை முதல் தொடங்கியதையடுத்து, அவா் மொடக்குறிச்சியில் உள்ள முக்கிய சாலைகளில் குதிரையில் கட்சிக் கொடியுடன் வலம் வந்தாா்.

பின்னா், தனது ஆதரவாளா்களுடன் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மனு தாக்கல் செய்ய வந்தாா். அவரை சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு முன் நிறுத்திய போலீஸாா், குதிரையில் சென்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை எனக் கூறினா்.

இதையடுத்து, குதிரையில் இருந்து இறங்கிய அவா் மொடக்குறிச்சி மண்டலச் செயலாளா் சந்திரசேகா், மாவட்டச் செயலாளா் ரகுநாதன், மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் லோகேஷ், மாநில உழவா் பாசறை ஒருங்கிணைப்பாளா் நல்ல சக்திவேல் ஆகியோருடன் நடந்து சென்று தோ்தல் நடத்தும் அலுவலா் தியாகராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மொடக்குறிச்சியில் நான் வெற்றிபெற்றால் விவசாயம் பிரதானமாக உள்ள இத்தொகுதியில் வாழைக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயா்த்தப்படும்.

கொடுமுடி -பிலிக்கல்பாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படும். பாசூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.