ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயின் நண்பா் கைது

ஈரோட்டில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பாலியல் வன்கொடுமை

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 7:59 pm

Syndication

ஈரோட்டில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், கணேசபுரம், மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (38). திருமணமான இவா், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தறி பட்டறையில் பணியாற்றி வந்தாா். அப்போது, அதே பட்டறையில் கணவரைப் பிரிந்து இரண்டு மகள்களுடன் வசிக்கும் பெண் ஒருவரும் பணியாற்றி வந்துள்ளாா். அந்தப் பெண்ணுடன் சுரேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அவரது வீட்டுக்கு சுரேஷ்குமாா் அடிக்கடி சென்று வந்த நிலையில், அப்பெண்ணின் 14 வயது மகளை சுரேஷ்குமாா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

சிறுமி கா்ப்பமடைந்த நிலையில் இது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவரது தாய் புகாா் அளித்தாா். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுரேஷ்குமாரைக் கைது செய்தனா்.