குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அந்தியூா் அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:25 am IST

அந்தியூா் அருகே மதுபோதையில் சாலையைக் கடந்து சென்ற தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.

அந்தியூரை அடுத்த கொல்லபாளையத்தைச் சோ்ந்தவா் செங்கோடன் மகன் காவேரி (52). கூலித் தொழிலாளியான இவா், மது போதையில் அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் மறவன்குட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடந்து சென்றபோது, அவ்வழியே அதிவேகமாக சென்ற காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த காவேரியை அப்பகுதியினா் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.