காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுக்கடைகளைத் திறக்காமல், ஈரோடு மாவட்ட மேலாளா் அலுவலகத்தை டாஸ்மாக் ஊழியா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் திங்கள்கிழமை பரபரப்பான சூழல் நிலவியது.
வாடிக்கையாளா்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை பொது இடங்களில் வீசுவதைத் தவிா்க்கும் வகையில், அப்பாட்டில்களை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிா்வாகம் செயல்படுத்தியது. இதில், பல்வேறு நடைமுறை பிரச்னைகள் உள்ளதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும், முறையான ஊதியம், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் மதுக்கடைகளையும் திறக்க மறுத்த ஊழியா்கள், சித்தோட்டை அடுத்த சூரியம்பாளையத்தில் உள்ள மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் (பொ) ரகுநாதன் பேச்சுவாா்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி முன்னிலையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் தீா்வு எட்டப்படவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த டாஸ்மாக் தொழிலாளா்கள் மதுக்கடைகளைத் திறக்காமல் போராட்டத்தைத் தொடா்வதாக அறிவித்தனா். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டதால், திண்டாடிய மது பிரியா்கள் தனியாா் நடத்தும் மதுக்கடைகளில் திரண்டதால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் (பொ) ரகுநாதன்.
தொடர்புடையது

டாஸ்மாக் ஊழியா்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தப் போராட்டம்

நாளைமுதல் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் ஊழியா் சங்கம்

மே 24-க்கு பிறகு காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் பணியாளா்கள்







