நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் 20 அம்ச திட்டத்தின்கீழ் ராணுவத்தினருக்கு 200 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிரிஷ் விகாஸ் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரசாஞ்சித் போஸ், உதகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். கடந்த 1975-இல் 20 அம்ச திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த 1983ஆம் ஆண்டில் கிரிஷ் விகாஸ் கேந்திரா அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக வறுமையை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் நூற்றாண்டு திட்டமான கிரிஷ் விகாஸ் ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டு, தற்போது நாடு முழுதும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் நீலகிரியில் முதற்கட்டமாக 200 வீடுகள் கட்டித்தர முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகள் ரூ.13.5 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரையிலான விலையில் கட்டித் தரப்படும். இதற்காக உதகை அருகேயுள்ள காத்தாடிமட்டம் பகுதியில் பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் பழங்குடியினருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டித்தரப்படவுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

