கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

காங்கிரஸ் கட்சியினர் பேரணி, பொதுக் கூட்டம்

கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நிலப் பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நிலப் பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள பிரிவு-17,53 உள்ளிட்ட அனைத்து கைவச பூமிகளுக்கும் பட்டா வழங்கவேண்டும். பிரிவு -17  நிலங்களில் குடியிப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்கவேண்டும். 
ஓவேலி பகுதியில் அடிப்படை வசதிகளை செயல்படுத்த விடாமல் தடுத்துவரும் வனம், வருவாய்த் துறை அலுவலர்களை கண்டித்தும்,  வனப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், வன உரிமை அங்கீகாரச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், டான் டீ தேயிலைக் கோட்டத்தில் தொழிற்சாலைகள் மூடி வருதைக் கண்டித்தும், டான் டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியாகச் சென்று புதிய பேருந்து நிலையம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக காந்தித்திடலைச் சென்றடைந்தனர்.
தொடர்ந்து, கே.பேபி நினைவரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு மாநில கமிட்டி உறுப்பினர் கே.பி.முகமது தலைமை வகித்தார். மாநில கமிட்டி உறுப்பினர் கோஷி பேபி முன்னிலை வகித்தார். 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சிறப்புரையாற்றினார். உதகை சட்டப் பேரவை உறுப்பினர் கணேஷ் மற்றும் மாவட்ட, நகர, தாலுகா கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.