குன்னூரில் பிளாகிங் - இந்தியா' என்ற பெயரில் தூய்மை பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
பெங்களூருவைச் சேர்ந்த பிளாகிங் குழு சார்பில் நடைபயிற்சியின் போது தூய்மை பணிகளையும் மேற்கொள்ளும் பணிகள் நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெங்களூருவைச் சேர்ந்த குழுவின் தலைவர் ஜேக்கப் செரியன் தலைமையில், கிளீன் குன்னுôர் அமைப்புடன் இணைந்து குன்னூர் சிம்ஸ்பார்க் முதல் பெட்போர்டு வரையில் இந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நடைபயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். இதன் பின் கோத்தகிரியிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறிகையில், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போதே ஆங்காங்கே இருக்கும் குப்பைகளை அகற்றுவதால், தெருக்கள் தூய்மையாவதுடன் அவர்களுக்கு அது உடற்பயிற்சி மேற்கொள்வதாகவும் உள்ளது. இதை நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்!

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

ஆலவயல் பெரியபூதன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

பவன் கேரா முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது உச்சநீதின்றம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

