தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

உதகையில் தேசிய மண், நீர்வள பாதுகாப்பு மாநாடு 31இல் தொடக்கம்: ஆளுநர் பங்கேற்பு

உதகையில் அகில இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மாநாடு இம்மாதம் 31ஆம் தேதி  தொடங்குகிறது.

Updated On :23 ஜனவரி 2019, 5:33 am IST

உதகையில் அகில இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மாநாடு இம்மாதம் 31ஆம் தேதி  தொடங்குகிறது. தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணிவண்ணன் கூறியதாவது:
 இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் 28ஆவது அகில இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மாநாடு உதகையில் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 31ஆம் தேதி நடைபெறும் இதன் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.  3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம்,  பேரிடர் மேலாண்மை,  நீர்வள மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.