மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

குன்னூர் ஆற்றில் தூய்மைப் பணி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குன்னூர் பேருந்து நிலையத்தையொட்டி செல்லும் ஆற்றில் கிளீன் குன்னூர் அமைப்பு சார்பில் நடைபெற்ற

Updated On :5 ஜூன் 2019, 9:36 pm


உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குன்னூர் பேருந்து நிலையத்தையொட்டி செல்லும் ஆற்றில் கிளீன் குன்னூர் அமைப்பு சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியை நீலகிரி மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து கிளீன் குன்னூர் அமைப்பின் அமைப்பாளர் சமந்தா அய்யண்ணா கூறியதாவது:     
நீலகிரியில் நீராதாரங்கள் அழிந்து வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் காட்டு தீயால் காற்று மாசடைந்துள்ளது. அதிக அளவு கட்டடங்கள் காரணமாகவும் நீலகிரியில் உள்ள வனங்கள் அழிந்து வருகின்றன. மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறு மழை பெய்தால் கூட நிலச்சரிவு, மண்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில் மரங்களும் வெட்டி அழிக்கப்படுகின்றன.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குன்னூர் பேருந்து நிலையத்தை ஒட்டி செல்லும் ஆற்றில் இருந்த குப்பைகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டுள்ளோம். இப்பணி பர்லியாறு பகுதி வரை நீடிக்கும் என்றார்.
இந்த தூய்மைப் பணியில் மருத்துவர் வசந்தன், பிரசன்னன் மப்சாவன் உள்பட  20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.