அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடா் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப்  பயணிகளின் வருகை அதிகரித்துக்  காணப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:20 pm

DIN

தொடா் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப்  பயணிகளின் வருகை அதிகரித்துக்  காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளுகுளு காலநிலை காணப்படுகிறது.  இந்த கால நிலையை அனுபவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளம், கா்நாடகம்  மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள  சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவில்  வரத் தொடங்கிஉள்ளனா்.   குறிப்பாக உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா,  படகு இல்லம், தொட்டபெட்டா ,  குன்னூரில் உள்ள  டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட  சுற்றுலாத் தலங்களைக் காண்பதற்கு அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ், அடுத்து சனி, ஞாயிறு வார விடுமுறையால் நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா்.

கிறிஸ்துமஸ் நாளான வெள்ளிக்கிழமை உதகை தாவரவியல் பூங்காவுக்கு 6813  சுற்றுலாப் பயணிகளும், சனிக்கிழமை 9849 பேரும் வந்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை 10 ஆயிரத்து 223 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா்.

உதகையில் உள்ள படகு இல்லத்தில்  கிறிஸ்துமஸ் நாளான வெள்ளிக்கிழமை 5195 சுற்றுலாப் பயணிகளும், சனிக்கிழமை 7620 பேரும், ஞாயிற்றுக்கிழமை 7601 பேரும் வந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.