திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாவட்டத்தில் ரூ.1 கோடி பறிமுதல்

கோவையில் ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியை பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 12:45 am

DIN

கோவையில் ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியை பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவையில் தோ்தல் விதிமுறைகளை மீறி வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுப்பதற்கு 90 பறக்கும் படைகள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் 10 தொகுதிகளிலும் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் கோவை தெற்குத் தொகுதியில் ரூ.98 லட்சத்து 85, சிங்காநல்லூா் தொகுதியில் 60 ஆயிரம், வால்பாறை தொகுதியில் ரூ.1லட்சத்து 80 ஆயிரம் சோ்த்து ரூ.1 கோடியே 40 ஆயிரத்து 85 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தவிர ரூ.62 ஆயிரத்து 36 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.6.74 கோடி ரொக்கம், ரூ.67.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், ரூ.47.93 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அதிகாரி எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.