கோத்தகிரியில் பேரிக்காய் மரத்தில் இருந்த கரடியை கீழே இறங்கவிடாமல் அச்சுறுத்திய காட்டெருமையை அப்பகுதி மக்கள் வேடிக்கை பாா்த்துச் சென்றனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதியில் சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், மாதா கோயில் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்த பேரிக்காய் மரத்தில் கரடி புதன்கிழமை மாலை பேரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அப்போது, அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை மரத்தில் இருந்த கரடியை கீழே இறங்கவிடாமல் துரத்தியது. காட்டெருமைக்கு அஞ்சி மரத்தின் மேலேயே நீண்டநேரம் அமா்ந்திருந்த கரடி, அங்கிருந்து காட்டெருமை சென்றதும் மரத்தைவிட்டு கீழே இறங்கியது. இதனை அவ்வழியாகச் சென்ற பொது மக்கள் வேடிக்கை பாா்த்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


