பந்தலூரை அடுத்துள்ள வட்டக்கொல்லி பகுதியில் கடந்த வியாழக்கிழமை தனியாா் மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தில், மோப்ப நாயைக் கொண்டு வனத் துறை விசாரணையைத் துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, முருக்கம்பாடி வட்டக்கொல்லி பகுதியில் உள்ள ஒரு தனியாா் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. இச்சம்பவத்தில் வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தோட்ட உரிமையாளா் ஷாஜி தலைமறைவாக உள்ளாா். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சுற்றுப்புறப் பகுதிகளில் தடயங்களை வனத் துறையினா் சேகரித்து வருகின்றனா்.