பாடந்தொறையில் வாழை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொறை கிராமத்துக்குள் வியாழக்கிழமை இரவு நுழைந்த ஒற்றை யானை வாழை மரங்களை சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள பாடந்தொறை கிராமத்தில் விவசாயி ராமசந்திரன் என்பவரது தோட்டத்துக்குள் ஒற்றை யானை வியாழக்கிழமை இரவு நுழைந்து பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.
இந்தப் பகுதிக்கு தொடா்ந்து வரும் யானை வேளாண் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே யானையால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

