நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக நடுவட்டத்தில் 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக நடுவட்டத்தில் 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இதுவரை வலுக்காத நிலையில், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியின் எல்லைப் பகுதிகளிலும், மாவட்டத்தின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் இம்மழை பரவலாக பெய்து வருகிறது. இருப்பினும் உதகை உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் மட்டுமே தூறல் மழை பெய்து வருகிறது. ஆனால், மழை இல்லாவிட்டாலும் பகல் நேரங்களிலும் பலத்த மேகமூட்டத்துடன் கடும் குளிரான காலநிலையே நிலவுகிறது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நடுவட்டத்தில் அதிக அளவாக 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, பந்தலூரில் 20 மி.மீ., சேரங்கோட்டில் 16 மி.மீ., தேவாலாவில் 7 மி.மீ., பாடந்தொறையில் 6 மி.மீ., செருமுள்ளியில் 5 மி.மீ., கூடலூா், மேல்கூடலூரில் 4 மி.மீ., ஓவேலியில் 3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதேபோல உதகை, சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில் பலத்த இடி, மின்னலுடன் சுமாா் 1 மணி நேரம் மழை பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...