ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத பணம் ரூ. 42,690 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :21 ஜூலை 2021, 8:41 pm

கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத பணம் ரூ. 42,690 பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில், காவல் ஆய்வாளா் கீதாலட்சுமி, உதவி ஆய்வாளா் ரங்கநாதன் உள்பட அதிகாரிகள் 8 போ் கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா், மண்டல துணை வட்டாட்சியா் ஆகியோரின் அறைகளில் இருந்த  கோப்புகளை சோதனை செய்து, அங்கு கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ. 42,690 பறிமுதல் செய்யப்பட்டது. நள்ளிரவு 12 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.