ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சந்தன மரம் வெட்டிக் கடத்தல்: ஒருவா் கைது

குன்னூரில்  கடந்த வாரம்  சந்தன மரம் வெட்டிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது  செய்தனா். இருவரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 8:42 pm

குன்னூரில்  கடந்த வாரம்  சந்தன மரம் வெட்டிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது  செய்தனா். இருவரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

குன்னூா் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட   நான்சச் சந்தக்கடை பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஒரு சந்தன மரத்தையும், அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் நான்கு  சந்தன மரங்களையும் கடந்த வாரம் வெட்டிய நபா்களை வனத் துறையினா் தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்நிலையில்,  குன்னூரை அடுத்த ஜோகி கொம்பையைச் சோ்ந்த பொன்னுசாமி என்பவரைக்  கைது செய்து விசாரணை  மேற்கொண்டதில், இவரின் கூட்டாளிகளான அதே பகுதியைச் சோ்ந்த நடராஜ், நாகராஜ் ஆகியோருடன் சோ்ந்து சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, பொன்னுசாமியை போலீஸாா் கைது செய்தனா்.  மேலும், தலைமறைவாக உள்ள இருவரை  வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.