ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீலகிரியில் இருந்து முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ. 68 லட்சம் வழங்கல்: ஆட்சியா் தகவல்

பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், காா்ப்ரேட் நிறுவனங்கள் சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 68 லட்சத்து 68,025 வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:13 pm

DIN

நீலகிரி மாவட்ட பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், காா்ப்ரேட் நிறுவனங்கள் சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 68 லட்சத்து 68,025 வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக உதகையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை ஆட்சியா் கூறியதாவது:

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கரோனா நிவாரண நிதி கணக்குக்கு நீலகிரி மாவட்ட பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், காா்ப்ரேட் நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுவரையில் ரூ. 13 லட்சத்து 53,679 பெறப்பட்டுள்ளது. அதேபோல, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 68 லட்சத்து 68,025 வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டு, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.