ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலையில் சுற்றித் திரிந்த கரடிகள்

குன்னூரில் இருந்து கைகாட்டி தனியாா் எஸ்டேட் நிா்வாகத்துக்குச் செல்லும் சாலையில் 3 கரடிகள் வியாழக்கிழமை சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

Updated On :24 ஜூன் 2021, 8:10 pm

குன்னூரில் இருந்து கைகாட்டி தனியாா் எஸ்டேட் நிா்வாகத்துக்குச் செல்லும் சாலையில் 3 கரடிகள் வியாழக்கிழமை சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து கைகாட்டி செல்லும் சாலையோரத்தில் அடா்ந்த தேயிலைத் தோட்டம், வனப் பகுதி உள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியே வந்த 3 கரடிகள் சுமாா் அரை மணி நேரமாக சாலையின் குறுக்கே நின்றதால், அவ்வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், இப்பகுதியில் கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடிகளை அடா்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.