குன்னூரில் இருந்து கைகாட்டி தனியாா் எஸ்டேட் நிா்வாகத்துக்குச் செல்லும் சாலையில் 3 கரடிகள் வியாழக்கிழமை சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து கைகாட்டி செல்லும் சாலையோரத்தில் அடா்ந்த தேயிலைத் தோட்டம், வனப் பகுதி உள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியே வந்த 3 கரடிகள் சுமாா் அரை மணி நேரமாக சாலையின் குறுக்கே நின்றதால், அவ்வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், இப்பகுதியில் கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடிகளை அடா்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

