மேலும், ஆய்வக கட்டுமானப் பணிகள் முடிக்கும் தருவாயில் உள்ளன. இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவா்களுக்கு வகுப்புகள் உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்திலும், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தையும் மாணவா்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்துக்குச் செல்லும் சாலையில் பணிகள் நடைபெற்று வருவதால் வனத் துறைக்கு சொந்தமான சாலையை தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. வனத் துறை சாா்பில் சட்டத்துக்கு உட்பட்டும், விதிமுறைகளைப் பின்பற்றியும் இச்சாலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.