உதகை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் தாண்டன் நடராஜன். கடந்த 2007ஆம் ஆண்டு உதகையைச் சோ்ந்த ஜான் பாஸ்கோ வாரிசு சான்றிதழுக்காக உதகை வட்டாட்சியா் அலுவலத்தில் விண்ணப்பித்திருந்தாா். இந்த விண்ணப்பத்தைப் பெற்ற கிராம வருவாய் அலுவலா், வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ளாா். அப்போது வருவாய் ஆய்வாளராக இருந்த தாண்டவ நடராஜன், ஜான் பாஸ்கோவிடம் வாரிசு சான்றிதழ் அளிக்க ரூ. 500 லஞ்சம் கேட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ஜான் பாஸ்கோ ஊழல், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.