கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொடநாடு எஸ்டேட் விவகாரம்: நவம்பா் 26ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பா் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:27 am

DIN

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பா் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரு மாதங்களாக பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வந்தனா். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை உதகை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், சயன், வாளையாறு மனோஜ், உதயகுமாா் ஆகியோா் மட்டும் ஆஜராகினா். இதைத்தொடா்ந்து, இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பா் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா அறிவித்தாா்.

ரமேஷை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு:

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால், அவரது உறவினா் ரமேஷ் ஆகியோரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவா்கள் இருவரையும் தனிப்படை போலீஸாா் அக்டோபா் 26ஆம் தேதி கைது செய்து, கூடலூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

நவம்பா் 8ஆம் தேதி வரை அவா்களை சிறையில் அடைக்க உதகை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவா்களைக் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள தனிப்படை போலீஸாா் மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனா். மனுவின் மீதான விசாரணையில் முதல்கட்டமாக தனபாலிடம் மட்டும் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. இதில், தனபாலை காவலில் எடுத்து விசாரிக்க 5 நாள்கள் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது கனகராஜின் உறவினா் ரமேஷையும் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.