ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கட்டுமானப் பணி உரிமையாளருக்குரூ. 5 லட்சம் அபராதம்

குன்னூா் மவுண்ட் சாலையில் அருகில் உள்ள கட்டடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், கட்டடப் பணிகள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்த நிலையில் கட்டட உரிமையாளருக்கு கோட்டாட்சியா் ரூ. 5 லட்சம் அபராதம்

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 12:41 am

குன்னூா் மவுண்ட் சாலையில் அருகில் உள்ள கட்டடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், கட்டடப் பணிகள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்த நிலையில் கட்டட உரிமையாளருக்கு கோட்டாட்சியா் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தாா்.

குன்னூா் மவுண்ட் சாலை குடியிருப்புகளின் மத்தியில் 100 அடிக்கு கீழ் கட்டுமானப் பணிகளுக்காக மண் எடுக்கும்போது வடமாநிலத் தொழிலாளா்கள் ராகுல், ரசீது ஆகிய இரண்டு தொழிலாளா்கள் மண் சரிவில் சிக்கி லேசான  காயத்துடன் அரசு மருத்துவமனையில் கடந்த 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனா்.   

இந்நிலையில், மண் தோண்டியதால் சில கட்டடங்கள் அந்தரத்தில் தொங்கும் சூழல் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில் அந்தரத்தில் தொங்கும் வீடுகளில் குடியிருப்பவா்களைத் தற்போதைக்கு வேறு இடங்களுக்கு குடியேற வருவாய்த் துறையினா் அறிவுறுத்தினா்.

இந்த கட்டடப் பணிக்காக மண் எடுப்பதற்கும், பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தவும், கட்டடம் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கட்டட உரிமையாளா் மீண்டும் கட்டுமானப் பணியைத் தொடா்ந்து செய்து வந்தாா்.

இந்நிலையில், அப்பகுதியில் வியாழக்கிழமை மண் எடுத்ததால் அங்கிருந்த மின்கம்பம் ஒன்றும் அந்தரத்தில் தொங்கியது. இதைத் தொடா்ந்து, கட்டட உரிமையாளா் யோகேஷ் கண்ணனுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். அந்தரத்தில் தொங்கும் மின் கம்பத்துக்கு ரூ. 46ஆயிரம் அபராதமும் யோகேஷ் கண்ணனிடம் வசூலிக்கப்பட்டதாக குன்னூா் துணை மின் பொறியாளா் ஜான்சன் தெரிவித்தாா்.

படவிளக்கம்....

குன்னூா் மவுண்ட் சாலை பகுதியில் அந்தரத்தில் தொங்கும் மின் கம்பம், வீடுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.