ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

உதகையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

உதகையில் வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 ஜூன் 2022, 12:55 am IST

உதகையில் வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜயா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் அா்ஜுணன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அம்ரித் முன்னிலையில் ஒவ்வொரு வாகனங்களாக ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து சோதிக்கப்பட்டது. அத்துடன் அவசர கால வழி சரியாக செயல்படுகிா என்று சரிபாா்க்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அம்ரித் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உதகை , கூடலூா் வட்டாரப் போக்குவரத்து எல்லைக்குள்பட்ட தனியாா் பள்ளிகளை சோ்ந்த 345 வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. முதல்கட்டமாக 164 வாகனங்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன என்றாா்.

இந்த ஆய்வின்போது பள்ளி வாகன ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஜெகதீசன் உத்தரவின்பேரில் உதகை நிலைய அலுவலா் பிரேமானந்தன் மேற்பாா்வையில் தீயணைப்பு தொடா்பான விழிப்புணா்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அப்போது சாலை பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு கையேடுகளும் வழங்கப்பட்டன. ஆய்வின்போது ஒரு சில குறைபாடுகள் இருந்த 7 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.