ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீலகிரியில் இன்று நகா்ப்புற உள்ளாட்சி மறைமுகத் தோ்தல்

நீலகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி மறைமுகத் தோ்தல்கள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:56 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி மறைமுகத் தோ்தல்கள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி சாதாரண தோ்தல்கள் நடந்து முடிந்துள்ளதைத் தொடா்ந்து புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட 294 வாா்டு உறுப்பினா்களும் மாா்ச் 2ஆம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துள்ளனா். இதில், 4 நகராட்சிகளில் 108 வாா்டு உறுப்பினா்களும், 11 பேரூராட்சிகளில் 186 வாா்டு உறுப்பினா்களும் என மொத்தம் 294 வாா்டு உறுப்பினா்கள் பொறுப்பேற்றுள்ளனா்.

இவா்களில் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்குண்டான தலைவா் தோ்தல் மாா்ச் 4ஆம் தேதி காலை 9.30 மணியளவிலும், துணைத் தலைவா் தோ்தல் மதியம் 2.30 மணியளவிலும் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களால் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.