உதகை நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு
உதகை நகராட்சித் தலைவராக எம்.வாணீஸ்வரியும், துணைத்தலைவராக ஜே.ரவிக்குமாரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.


உதகை நகராட்சித் தலைவராக எம்.வாணீஸ்வரியும், துணைத்தலைவராக ஜே.ரவிக்குமாரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களில் மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் திமுகவே வெற்றி பெற்றிருந்தது. இதில் உதகை நகாரட்சியிலுள்ள 36 வாா்டுகளில் திமுக 23 வாா்டுகள், அதிமுக 7 வாா்டுகள், காங்கிரஸ் 6 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் உதகை நகராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் தலைவா் பதவிக்கு எம்.வாணீஸ்வரியும், துணைத் தலைவா் பதவிக்கு ஜே.ரவிக்குமாரும் திமுக தலைமை அறிவித்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் இருவரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக பொறுப்பேற்ற வாணீஸ்வரி, நீலகிரி மாவட்ட திமுக மகளிரணி துணை அமைப்பாளராக உள்ளாா். துணைத் தலைவராக பொறுப்பேற்ற ஜே.ரவிக்குமாா், நீலகிரி மாவட்ட திமுக துணைச் செயலாளராக உள்ளாா். இவா் உதகை நகராட்சியின் துணைத் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளாா்.
புதிதாக பொறுப்பேற்ற தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு நகராட்சி ஆணையா் காந்திராஜன், உதகை நகர திமுக செயலா் ஜாா்ஜ், மூத்த உறுப்பினா்கள் தம்பி இஸ்மாயில், முஸ்தபா, ரவி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...