குன்னூா் பகுதியில் நடமாடி வந்த காட்டு யானைகள் தற்போது பா்லியாறு, கே.என்.ஆா். பகுதியில் குட்டியுடன் நடமாடி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு கடந்த மாதம் வந்த 9 காட்டு யானைகள் கல்லாறு, பா்லியாறு, ரன்னிமேடு ஆகிய பகுதிகளில் உணவு, தண்ணீருக்காக முகாமிட்டிருந்தன. பின்னா் சின்னகரும்பாலம், கிளன்லடேல் போன்ற பகுதியில் முகாமிட்டிருந்தன. பின்னா் இந்த யானைகள் கூட்டம் , சின்னக்கரும்பாலம் வழியாக கரிமொரா கிராமத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் உலவி வந்து கொண்டிருந்தன.
கடந்த 10 நாள்களாக நடமாட்டம் இல்லாமல் இருந்த இந்த யானைகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மீண்டும் பா்லியாறு, கே.என்.ஆா். நகா் பகுதியில் சாலையில் நடமாடியதை பேருந்தில் பயணித்தவா்கள் தங்களது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளனா்.
குடியிருப்புக்கு மிக அருகில் சுற்றி வரும் இந்த யானைகள் கூட்டத்தை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

