மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு: உதகை மக்கள் உதவிக்கரம்

சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

News image
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக உதகையில் பொதுமக்களிடம் நிதி திரட்டிய தன்னாா்வலா்கள்.
Updated On :2 ஆகஸ்ட் 2024, 8:00 pm

Din

வயநாடு பகுதியில்  ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் உதகையில் இருந்து பல்வேறு சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில்  ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்ட எல்லையோரம் உள்ள கேரள மாநிலம், வயநாட்டில் மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 1500-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படடுள்ளனா்.

இந்நிலையில், வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீலகிரி மாவட்ட சமூக ஆா்வலா்கள் அமைப்பு சாா்பில் சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான அரிசி, சா்க்கரை, பருப்பு, பிஸ்கட், கம்பளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.